← Back to list
முழு MCO? கலந்தாலோசிக்கப்பட்டே முடிவெடுக்கப்படும்!
May 18, 2021
முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCOவை அமுல்படுத்தும் சாத்தியம் குறித்து, அனைத்து தரப்புகளுடான பேச்சு வார்த்தைக்கு பின்னரே முடிவெடுக்கப்படும்!

குறிப்பாக, சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு ஏற்ற வகையில் தான் MCO அமுலாக்கம் அமையும் என, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.
COVID-19 தொற்று நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அமைச்சர் சொன்னார்.
ஒருவேளை, கடந்தாண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது போல, முழு அளவிலான MCOவை கொண்டு வருவதற்கான தேவை இருப்பதாக சுகாதார அமைச்சு கருதினால், அவ்விவாகரம் குறித்து அக்கூட்டத்தில் பேசப்படும் என்றாரவர்.
கொரோனா நிலவரம் கவலையளிக்கிறது!
சிலாங்கூரிலுள்ள முதலாளிகள் மாநில அரசு வாயிலாக தங்களது தொழிலாளர்களுக்கான COVID-19 தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ளலாம்!
மாநில அரசாங்கத்தின் SELangkah விண்ணப்பம் வாயிலாக முதலாளிகள் அதற்கு பதிவு செய்து கொள்ளலாம் என, சிலாங்கூர் மாநில பொது சுகாதாரத்திற்கான ஆட்சிக் குழு உறுப்பினர் கூறியுள்ளார்.
இவ்வேளையில், தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்த மாநில அரசாங்கம் 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது.

சிலாங்கூரில் COVID-19 தொற்றுக்கு ஆளாவோருக்கு சிகிச்சை அளிக்க மேலும் அதிகமான படுக்கை வசதிகளும், அவசர சிகிச்சைப் பிரிவு ICUவுக்கான உபகரணங்களும் வழங்கப்படும் என மாநில Menteri Besar அறிவித்துள்ளார்.
சிலாங்கூரில் கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து, கவலையை ஏற்படுத்தியிருப்பதை அடுத்து MB இதனை தெரிவித்துள்ளார்.
மக்கள் சோர்வடைந்துள்ளனர்!
COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாடு போராடி வரும் நிலையில், சிலர் SOPகளை மீறி செயல்பட்டு வருகின்றனர்!
அதனை தெளிவாக காட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பதிவேற்றம் பொது மக்கள் மத்தியில் ஆதங்கத்தை தான் ஏற்படுத்துகின்றது.
இருப்பினும், இன்னும் பலர் அரசாங்கம் நிர்ணயித்துள்ள SOPகளை முறையாக பின்பற்றி, அந்த புதிய வழமைகளை அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாகவே மாற்றிக் கொண்டுள்ளனர்.
உதாரணத்திற்கு, அண்மைய நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை கூறலாம் என்கிறார், UPSI பல்கலைக்கழகத்தின் உளவியலாளர்.

Hari Rayaவின் போது, பெரும்பகுதி மக்கள், தங்களது வீடுகளில், பேரளவிலான ஒன்றுக்கூடுதல்கள் மற்றும் விருந்துபசரிப்புகளை நடத்தாமல், SOPக்கு கட்டுப்பட்டு மிதமான அளவில் பெருநாள் கொண்டாடியதை காண முடிந்ததாக அவர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில், முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றினால் பலரும் விரக்தியடைந்துள்ளனர் என்பதே உண்மை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதனால் ஏற்படும் களைப்பு மற்றும் மனச்சோர்வினால், மக்கள் SOPகளை கண்டுக் கொள்வதில்லை;
கொரோனா ஆபத்து பற்றியும் அவர்கள் கவலைப்படாத நிலை ஏற்பட்டிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
Pastikan anda mendengar Buletin PETRONAS di THR Gegar pada waktu-waktu berikut:
Isnin - Khamis
7:00am, 8:00am, 9:00am
12:00pm, 6:00pm
Jumaat - Sabtu
10:00am
12:00pm, 1:00pm
Ahad
7:00am. 8:00am, 11:00am
1:00pm
Cuaca